Skip to main content

'தன்னுடைய நாகரீகமற்ற நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்கிறேன்'-சித்தார்த் ட்வீட்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

 'I apologize for his rude joke' - Siddharth tweets!

 

சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில்  இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் பஞ்சாப் சென்ற போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாய்னா நேவால் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், "எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்புக்கு சமரசம் செய்தால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது.பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் வலுவாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த சித்தார்த்தின் பதிவு சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் அவரின் இந்த பதிவு விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி  அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

இந்நிலையில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டு டிவிட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய நாகரீகமற்ற நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ள சித்தார்த், 'ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவையே அல்ல, தங்களது ட்வீட்டுக்கு பதிலாக நான் பதிவிட்ட வார்த்தைகள் அதன் விதத்தை நியாயப்படுத்த முடியாது. என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். எப்போதும் நீங்கள் என் சாம்பியன்' என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிதி ராவுடன் திருமணமா? - புகைப்படத்துடன் தெளிவுபடுத்திய சித்தார்த்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
siddharth calrifies on his marrige news to aditi rao

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே காற்று வெளியிடை மூலமாக அறிமுகமாகி செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் வெளிப்படையாக காதலை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், இருவரும் நேற்று தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் சித்தார்த் - அதிதி ராவ் தரப்பு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.  

siddharth calrifies on his marrige news to aditi rao

இந்த நிலையில் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதிதி ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “அவள் ஒப்புக்கொண்டாள். நிச்சயதார்த்தம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் இருவருக்கும் நிச்சயம் முடிக்கப்பட்ட நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்தார்த், 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2007ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதிதி ராவும் சத்யதீப் மிஸ்ரா என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

திருமணம் செய்து கொண்ட சித்தார்த் - அதிதி ராவ்?

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
siddharth aditi rao marriage

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே காற்று வெளியிடை மூலமாக அறிமுகமாகி செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் வெளிப்படையாக காதலை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்ததாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடாத சூழலில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தார்த் 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2007ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதிதி ராவ்வும் சத்யதீப் மிஸ்ரா என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.