ADVERTISEMENT

ரூ. 35 முதல் 40க்குள் பெட்ரோல், டீசல் தர தயார் - பாபா ராம்தேவ்

10:03 AM Sep 17, 2018 | rajavel


ADVERTISEMENT

ரூபாய் 35க்கு பெட்ரோல் தர தயார் என்றும், மோடி அரசு மிகப்பெரிய விலை திரவேண்டியிருக்கும் என்றும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

பாபா ராம்தேவ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும்.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து அதற்கு குறைவான வரி விதிக்க வேண்டும். இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.

மேலும், மத்திய அரசு எனக்கு சில வரிச்சலுகை அளித்தால் நாடு முழுவதும் ரூபாய் 35 முதல் ரூபாய் 40க்குள் பெட்ரோல் மற்றும் டீசலை வழங்க தயாராக இருக்கிறேன் என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT