Skip to main content

“அந்த பெண் எடுக்க வேண்டாமென விட்டுப்போன சீட்டால் நான் கோடீஸ்வரன்” - பம்பர் லாட்டரி வென்ற கேரளா ஆட்டோ டிரைவர்

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

"I am a millionaire because of the ticket that girl refused" - Kerala auto driver

 

கேரளா அரசு லாட்டரி சீட்டை நடத்தி வருகிறது. அதேபோல், கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் மற்றும் சித்திரை விசு, கிறிஸ்துமஸ், நியூ இயா், சரஸ்வதி பூஜை என விழாக் காலங்களில் பம்பர் லாட்டரிகளை அச்சிட்டு வெளியிடுகிறது. இதில் கேரளா பம்பர் லாட்டரி சரித்திரத்தில் இந்த ஓணம் பண்டிகையின் போது அறிவிக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி பரிசு தொகை தான் அதிகபட்சமாக உள்ளது.

 

இந்த லாட்டரி சீட்டின் விலை 500 ருபாய்க்கு விற்கப்பட்டது. பரிசு தொகை அதிகம் என்பதால் 500 ரூபாயை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் லாட்டரி சீட்டை எடுத்தனர். விற்பனையை பொறுத்து இரண்டு தடவையாக அச்சடிக்கபட்ட லாட்டரி சீட் 66.57 லட்சம் லாட்டரி விற்பனை செய்யப்பட்டுள்ளது. 18-ம் தேதி லாட்டரி சீட் குலுக்கல் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒட்டு மொத்த கேரளா மக்களின் எதிர்பார்ப்பு யார் அந்த கோடீஸ்வர அதிர்ஷ்டசாலி என்பதில் தான் இருந்தது. டிக்கெட் வாங்கியவர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை நினைத்தபடி இருந்தனர்.

 

"I am a millionaire because of the ticket that girl refused" - Kerala auto driver

 

இந்த நிலையில் 3 மணிக்கு அதிர்ஷ்டசாலியின் பெயா் கேரளா லாட்டரி துறையால் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடத்தில் அதிர்ஷ்டசாலியான திருவனந்தபுரம் ஸ்ரீவராகத்தை சோ்ந்த அனூப் (39) வீட்டிற்கு கேரளா மீடியாக்கள் படையெடுத்தனர். ஸ்ரீவராகம் ஏரியா பரபரப்பு அடைந்ததுடன் அனூப் பின் உறவினா்களும் நண்பா்களும் அங்கு குவிந்தனா். பின்னா் அனூப் தனது கா்ப்பிணி மனைவி மாயா மற்றும் முதல் குழந்தை அத்வைத்துடன் கூறும் போது, “டிவி யில் பார்த்து கொண்டியிருந்த போது நான் பழவங்காடி பகவதி லாட்டரி ஏஜென்சியில் இருந்து எடுத்த லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்துள்ளது என்று அறிவித்ததும் அப்படியே ஒரு சில நிமிடம் மகிழ்ச்சியில் உறைந்து போய் இருந்திட்டேன். ஆட்டோ டிரைவரான நான் கோடீஸ்வரன் ஆகிவிட்டேன் இவ்வளவு கோடிகளுக்கு நான் அதிபதியா என என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

 

சாதாரணமாக லாட்டரி சீட் எடுக்கும் பழக்கம் உள்ளவன் தான் நான். இதுவரை அதிக தொகையாக 5 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் அடித்து இருக்கிறது. ஆட்டோ வேலைக்காக ஓா்க்ஷாப்பில் விட்டு இருப்பதால் கையில் பணம் இல்லாததால் கடைசி நாள் வரை லாட்டரி சீட் எடுக்கவில்லை. கடைசி நாள் நண்பா் ஒருவனுடன் வேலைக்கு சென்று 450 ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை வைத்து லாட்டரி சீட் எடுக்கலாம்னு நினைத்தேன். அதற்கு இன்னும் 50 ருபாய் தேவைப்பட்டதால் வீட்டுக்கு சென்று மனைவியிடம் சொல்லி குழந்தையின் உண்டியல் பணத்தில் இருந்து 50 ருபாய் எடுத்து லாட்டரி சீட் வாங்கினேன்.

 

லாட்டரி வாங்கும் போது முதலில் ஒரு சீட் எடுத்தேன் அந்த எண் இஷ்டபடாததால் பக்கத்தில் நின்ற பெண் ஒருவர் எடுத்து வேண்டாம்னு திருப்பி கொடுத்த அந்த லாட்டரி சீட்டை வாங்கினேன். அதற்கு தான் இந்த 25 கோடி ரூபாய் விழுந்துள்ளது. இங்கு ஆட்டோ ஓட்டமும் சரிவர இல்லாததால் மலேசியாவில் ஹோட்டல் தொழிலுக்கு போக கூட்டுறவு வங்கியில் 2 லட்சம் கடன் கேட்டிருந்தேன். வங்கியில் இருந்தும் 17-ம் தேதி கூப்பிட்டு கடன் ரெடி ஆகி விட்டது 19-ம் தேதி வாங்குங்கள் என சொன்னார்கள். ஆனால், அதே நாளில் தான் லாட்டரி சீட்டும் அடித்து விட்டது” என்று எல்லையில்லா மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறது அனூப் குடும்பம். அனூப்-க்கு 25 கோடியில் ஏஜென்சி கமிஷன் மற்றும் அரசு வரி போக 15.75 கோடி ருபாய் ஓரிரு நாளில் கிடைக்கும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.