ADVERTISEMENT

"பஞ்சாப் மக்களின் முடிவை ஏற்கிறேன்"- நவ்ஜோத் சிங் சித்து!

10:37 PM Mar 10, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியைப் பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி. காங்கிரஸ் கட்சி 18 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி தழுவியது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் குரல் கடவுளின் குரல்; பஞ்சாப் மக்களின் தீர்ப்பைப் பணிவுடன் ஏற்கிறேன்; ஆம் ஆத்மிக்கு வாழ்த்து" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமிர்தசரஸ் கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து 6,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT