Skip to main content

"ஒரு ஆஃபர் லெட்டரை வச்சுக்கிட்டெல்லாம் பேப்பர் போடக்கூடாது" - பதவி விலகும் ஹூண்டாய் இயக்குனர் அட்வைஸ்

Published on 02/08/2018 | Edited on 02/08/2018
hyundai,sales and marketing

 

இந்தியாவின் இரண்டாவது பெரும் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஹூண்டாயின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் (sales & marketing) இயக்குனரான ராகேஷ் ஸ்ரீவஸ்தவா அந்த நிறுவனத்திலிருந்து பதவிவிலகுவதாக அறிவித்திருக்கிறார். ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் நிறுவனத்திலிருந்து தான் விலக பெரிதாக காரணங்கள் இல்லையென கூறியுள்ள அவர் அங்கு தனது நோட்டிஸ் பீரியடை (Notice Period) முடித்துவிட்டு அடுத்த நிறுவனம் குறித்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார். அவர் பி.எம்.டபிள்யு-இந்தியாவில் இணையப் போவதாக தகவல் வந்திருக்கிறது.  

 

இது தொடர்பாக பேசிய அவர் "நான் ஹூண்டாயில் சேர்வதற்கு முன்பு ஆறு நிறுவனங்களின் ஆஃபர் லெட்டர் என்னிடம் இருந்தது. அதே போல் இப்பொழுதும் நான்கு நிறுவனங்களின் ஆஃபர் லெட்டர் இருக்கிறது. ஆனால் நம்மால் எவவ்ளவு முடியுமோ அந்த அளவிற்கு வாய்ப்புகளை தேட வேண்டும். உடனடியாக முடிவெடுக்கக் கூடாது. நான் இன்னும் வேறு நிறுவனங்களிலும் எனக்கான, இன்னும் சிறப்பான வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்பேன், பின்னர்தான் முடிவு செய்வேன். ஒரு ஆஃபர் லெட்டரோடு திருப்தி அடைந்தெல்லாம்  நாம் இருக்கும் வேலையை விடக்கூடாது" என்று கூறியுள்ளார்.

 

ஒரு வெற்றிகரமான நிர்வாகியாக உயர்ந்த பணிநிலையில் இருக்கும் ராகேஷ் கூறியுள்ளதை தங்களுக்கான அறிவுரையாகக் கருதுகின்றனர் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள்.    

சார்ந்த செய்திகள்

Next Story

விற்பனைக்கு வந்த கிராமம்...

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

 Village for sale...

 

மக்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அக்கிராமத்தின் விலை 5,90,000 டாலராம். அதாவது இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாயாம்.

 

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் இருந்து சுமார் மூன்று மணி நேர பயண தூரத்திற்கு அப்பால் இருக்கும் மாநிலம் ஸமாரோ. அங்குள்ள சால்டோ டி காஸ்ட்ரோ கிராமம்தான் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. அந்த கிராமத்தில் 44 வீடுகள், தங்கும் விடுதிகள், பள்ளிக்கூடம், நீச்சல் குளம், காவலர் முகாம் என அனைத்தும் இருந்தும் தங்குவதற்கு மக்கள் இல்லை என்பதால் அதனை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த கிராமத்தை ஒருவர் வாங்கி அதனை சுற்றுலாத்தலமாக மாற்ற முயன்று தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

 

 

Next Story

ட்ரெண்டான 'BoycottHyundai'... விளக்கமளித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம்

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

Trend 'BoycottHyundai' ... explained by Hyundai India

 

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்தின் விற்பனையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தேசியத்தை மதிப்பதில் உறுதியாக இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 

 

ஹூண்டாய் நிறுவனத்தின் பாகிஸ்தான் டீலர் ஒருவரின் ட்விட்டர் பக்கத்தில் " காஷ்மீரில் சுதந்திரத்திற்கான போராட்டம்" எனப் பதிவிடப்பட்டதை கண்டித்து, ஹூண்டாய் தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் #BoycottHyundai ஹேஷ்டாக் ட்ரெண்டானது. 

 

இதற்கு பதிலளிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள ஹூண்டாய் இந்தியா நிறுவனம், இந்திய சந்தையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் இருப்பதாகவும், தேசியத்தை மதிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாம் வீடு இந்தியா என்றும், உணர்வுகளை மதிக்காத கருத்துகள் வெளியிடப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.