ADVERTISEMENT

பூமழை, கோஷங்கள், இனிப்புகள்... போலீசாரை தோளில் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள்... (வீடியோ)

11:07 AM Dec 06, 2019 | kirubahar@nakk…

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் கூடியுள்ள மக்கள் போலீசாரை தோளில் தூக்கிவைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். போலீசாருக்கு இனிப்புகள் வழங்கியும், போலீசார் வாழ்க என்று கோஷம் எழுப்பியும் மக்கள் கொண்டாடினர். மேலும் அப்பகுதியில் ரோஜா பூக்களை தூவிய மக்கள் போலீசாரை தோள்களில் தூக்கிவைத்து கொண்டாடினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT