Skip to main content

வீட்டில் புகுந்த தண்ணீர்... நீச்சல் குளமாக மாற்றிய தம்பதியினர்..!

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

இந்த ரண களத்திலும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குதா... இந்த டயலாக்கை நாம் திரைப்படத்தில் அடிக்கடி கேட்டு இருப்போம். வைகைப்புயல் வடிவேலு சொல்ற இந்த டயலாக்கை நாம பாரபட்சமில்லாமல் எல்லா இடத்திலேயும் பயன்படுத்தி இருப்போம். ஆனா அதுபோல ஒரு சம்பவம் நெஜமாவே நடந்து இருக்கு. அதற்கு இந்த வீடியோவே சாட்சியாக உள்ளது.

 


அந்த வீடியோவில் வீடு முழுவதும் இடுப்புக்கு மேல தண்ணி இருக்கும் நிலையில் அதை எதைப்பற்றியும் கவலை படாமல் மனைவிக்கு  நீச்சலடிக்க அவரின் கணவர் கற்று தருகிறார். இந்த  வீடியோவை பார்த்த எல்லாருமே இந்த ரண களத்துலயும் ஒரு கிளுகிளுப்பான்னு நினைக்க தோன்றும் அளவுக்கு இந்த வீடியோ காட்சிகள் உள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுட்டெரிக்கும் வெயில்; சுகம் தரும் நீச்சல் குளம்! 

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டிருந்த நீச்சல் குளங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சுகமாக தண்ணீரில் குழந்தைகளும், பெரியவர்களும் நீச்சல் அடித்தும் குளித்தும் மகிழ்ந்தனர். அதேபோல், கோடைகால விடுமுறையை கருத்தில் கொண்டு நீச்சல் பயிற்சி முகாம்களும் துவங்கியுள்ளன. சென்னை செனாய் நகர் பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்கின்றனர்.  

 

 

Next Story

நீச்சல் கற்றுக் கொடுக்க முயன்ற தாத்தா... பேத்தி, தாத்தா சடலமாக மீட்பு!

Published on 17/04/2022 | Edited on 17/04/2022

 

Tragic incident while teaching granddaughter to swim!

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகில் உள்ள அயனாவரம் நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவருடைய மகன் கிருஷ்ணன். கிருஷ்ணனின் மகள் இனியா (வயது 9). இவர் நொளம்பூர் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.  

 

நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இனியா ஆர்வமாக இருந்தார். அவரை ஊக்கப்படுத்தும் வகையில், செல்வராஜ் தனது பேத்திக்கு நீச்சல் கற்று கொடுப்பதற்கு முன்வந்தார். அதன்படி, நொளம்பூர் கிராமத்தில் உள்ள தண்ணீர் நிறைந்த ஏரியில் தனது பேத்திக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார் செல்வராஜ். 

Tragic incident while teaching granddaughter to swim!

அதைத் தொடர்ந்து, தனது பேத்திக்கு செல்வராஜ் தண்ணீரில் இறங்கி நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பேத்தி இனியா தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்டு பதறிப்போன சிறுமியின் தாத்தா செல்வராஜ், தண்ணீரில் தத்தளிக்கும் பேத்தியை மீட்கும் முயற்சியில் தண்ணீரின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, செல்வராஜூம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தாத்தா, பேத்தி ஆகிய இருவரையும் உயிரிழந்த நிலையில் மீட்டனர். 

 

இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூர் காவல் நிலைய காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.