Advertisment

மனைவிக்கு ஊசி மூலம் எய்ட்ஸை பரப்பிய கணவர்...

aid

Advertisment

புனேவில் வரதட்சணை கேட்டு கொடுக்காததால் கோபமடைந்த கணவன் தனது மனைவிக்கு ஊசி மூலம் எய்ட்ஸ் நோயை பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புனேவை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், வரதட்சணை தர முடியாததால் கணவர் விவாகரத்து கேட்டதாகவும் கூறியுள்ளார். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடாததால் ஹோமியோபதி மருத்துவரான தனது கணவர் காய்ச்சலுக்கு ஊசி போடுகிறேன் என கூறி அதில் எய்ட்ஸ் கிருமியை செலுத்தியதாக புகார் அளித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொண்ட பொழுது இது தெரிய வந்ததாக அவர் கூறினார்.

AIDS HIV world aids day
இதையும் படியுங்கள்
Subscribe