Advertisment

ஆட்டுக்கறி சமைக்க மறுத்ததால் ஆத்திரம்; மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்!

Husband brutally hit wife in anger over her refusal to cook mutton

ஆட்டுக் கறி சமைக்க மறுத்ததாகக் கூறி மனைவியைக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் பகுதியில் வசித்து வருபவர் மலோத் கலாவதி (35). இவருக்கு திருமணமாகி இருந்தது. இந்த நிலையில், கலாவதியின் கணவர் தனக்கு ஆட்டுக் கறி சமைத்து தரும்படி கூறியுள்ளார். இதற்கு கலாவதி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கலாவதிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கலாவதியின் கணவர், கலாவதியை சரமாரியாக அடித்தே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து, கலாவதியின் தாயார் இச்சம்பவம் குறித்து போலீசிடம் தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கலாவதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கலாவதியின் கணவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident police telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe