சவால்களைச் சமாளிப்பது எப்படி? -மாணவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி!

​  modi

'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020' இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். புதுமையான பொருட்களைக் கண்டுபிடிப்பதை ஊக்குவிக்கஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மென்பொருள் பிரிவுக்கான இறுதிப் போட்டியை ஆன்லைன் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில் காணொளியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

கோவையைச் சேர்ந்த மாணவிக்கு தமிழில் வணக்கம் என தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பிரதமர் பேசுகையில்,

இளைஞர்கள் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கேட்க ஆவலாக உள்ளேன். சவாலான காலகட்டத்தை மாணவர்கள் வெற்றிகரமாகக் கடந்து வருகிறார்கள். மழை பொழிவை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

corona virus modi student
இதையும் படியுங்கள்
Subscribe