Skip to main content

எத்தனை நாள்தான் பொறுப்பது... தகாத உறவுக்கு முயன்ற வாலிபனை கட்டிவைத்து வெளுத்த பெண்...!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இளம்பெண் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து வெளுத்துக்கட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் நால்கொண்டாவில் இளைஞர் ஒருவன் தொடர்ந்து ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் இதுகுறித்து அவரது கணவரிடம் கூற அந்த பெண்ணின் கணவர் இதனால் ஆத்திரம் அடைந்துள்ளார்.

 

 How many days is tolerate...women beat the men for trying illegal relationship How many days is tolerate...women beat the men for trying illegal relationship

 

இந்நிலையில் அஜாலாவாவி காலனியில் மீண்டும் அந்த பெண்ணிடம் அந்த நபர் தவறாக நடந்து கொள்ள முயன்றதை கண்ட அந்தப் பெண்ணின் கணவர் அவனைப் பிடித்து வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் கயிறினால் கட்டிப்போட்டார். கட்டி வைத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய ஷூவையும், ஒரு குச்சியை அவரது மனைவியிடம் கொடுத்து சரமாரியாக அந்த இளைஞனை அடிக்கவைத்து அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில் சம்பந்தப்பட்ட இளைஞன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு சரமாரியாக அந்த பெண்ணால் தாக்கப்படுகிறான்.

 

 How many days is tolerate...women beat the men for trying illegal relationship

 

காவல்துறையினர் வரும்வரை அடித்து வெளுத்துக்கட்டிய பிறகு அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அண்மையில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் இதேபோல் பெண் ஒருவர், தன்னிடம் பாலியல் அத்துமீறலுக்கு முயன்ற இளைஞரை எச்சரித்த படியே அடித்த வீடியோ காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்; வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A attack on the police who went to catch a ganja dealer; Exciting scenes released

சென்னை கண்ணகி நகர் சுனாமி நகர்  குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கத்தியால் வெட்டி இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இரண்டு பேரை அவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த கற்களை எடுத்து போலீசாரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள், போலீசாரைக் காப்பாற்ற முயன்றனர். உடனே கடுப்பான அந்தக் கஞ்சா ஆசாமி, அந்தப் பகுதி மக்களுக்கும் மிரட்டல் விடுத்தபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.