Skip to main content

ஆதார், பான் கார்டு இணைப்பு... இம்முறை தவறவிட்டால் ரூ.10,000 அபராதம்..?

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பதற்கு வரும் மார்ச் 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் இரண்டையும் இணைக்காதவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

how to link aadhar and pan card

 

 

சட்டவிரோத பண பரிமாற்றம், மற்றும் வருமான வரி குறித்த தகவல்களில் செய்யப்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு முடிவடைவதாக இருந்த சூழலில், 2020, மார்ச் 31 வரை இந்த காலக்கெடு நீடிக்கப்பட்டது. இதற்கான நாளும் நெருங்கிவரும் சூழலில், மார்ச் 31 க்குள் இரண்டையும் இணைக்காதவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான வழி:

1. incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்

2. Quick Links என்பதன்கீழ் Link Aadhaar கிளிக் செய்யவும் 

3. திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு இணைத்துக்கொள்ளலாம்.

4. ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் காண்பிக்கும்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்த ஆண்டு 1900; வயதோ 41; ஆதார் அட்டையால் தவியாய் தவிக்கும் பெண்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Born Andy 1900; Age 41; Woman struggling with Aadhaar card

 

ஆதார் அட்டையில் பிறந்த வருடம் பிழையாக இருப்பதால் பல வருடங்களாக அதை மாற்ற முடியாமல் திருச்சியை சேர்ந்த பெண் தவித்து வருகிறார்.

 

திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த கவிதா என்ற பெண் வைத்த கோரிக்கை தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவியின் பெயர் கவிதா. 41 வயதான கவிதா 1982ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு ஆதார் அட்டை கொடுக்கும் பொழுது அதில் பிறந்த வருடம் 1900 என அச்சிடப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், இதை மாற்றக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கவிதா அளித்த மனுவில், “எனது வாக்காளர் அடையாள அட்டையில் 3.5.1982 என எனது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ரேஷன் கார்டில் 41 வயது என்று உள்ளது. ஆனால் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் 1900 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டையின் படி எனக்கு 123 வயது. தற்போது ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்து ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதிலும் எனது வயது மாறுகிறது. ஆதார் அட்டையில் வயதை மாற்றக் கோரி 4 ஆண்டுகளாக அலைந்து வருகிறேன். ஆனால் மாற்ற முடியவில்லை. இதனால் பல இன்னல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். எந்த ஒரு நலத் திட்டமோ, வங்கியில் கடனுதவியோ எதுவும் வாங்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. எனவே, எனது வயதை மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

மேலும், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் எதுவும் பெற முடியாததால் பல சிக்கல்களை கவிதா அனுபவித்து வருவதாகவும் பிழையைத் திருத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Next Story

ஆதார் இருக்க ஐடி திட்டம் தேவையா?- தேமுதிக விஜயகாந்த் கேள்வி

Published on 08/01/2023 | Edited on 08/01/2023

 

Do you need an ID scheme to have Aadhaar?- Question by Dmdk Vijayakanth

 

'அரசின் அனைத்து சலுகைகளையும் மக்கள் பெறுவதற்கு ஆதார் எண் இருக்கும் பொழுது 'மக்கள் ஐடி திட்டம்' தேவையா?' என தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன் வந்தால் நாட்டில் குழப்பம் ஏற்படாதா? மத்திய மாநில அரசுகளின் சலுகைகளை பெற ஆதார் எண் இருக்கும்பொழுது மக்கள் ஐடி திட்டம் எதற்காக. தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்த பிறகு மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்துங்கள்' என தெரிவித்துள்ளார்.