Skip to main content

பத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்... புதிய வழிமுறைகள் வெளியீடு...

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

how to get e-pan card in ten minutes for free

 

பத்து நிமிடங்களில் இலவசமாக பான் கார்டு எண் பெறும் வகையில், புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிமுகப்படுத்தினார்.


மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆதார் அட்டையை கொண்டு பான் கார்டை உடனடியாக பெறுவதற்கான வசதியை இன்று முறையாக அறிமுகப்படுத்தினார். சரியான ஆதார் எண்ணை வைத்திருக்கும் மற்றும் ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டவர்கள் இத்திட்டத்தின் மூலம் பான் கார்டு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடிப்படையிலான இ- கே.ஒய்.சி மூலம் உடனடி பான் வசதி பெறும் இந்த முறையானது இன்று முறையாக தொடங்கப்பட்டாலும், சோதனை அடிப்படையில் பிப்ரவரி முதல் வருமான வரித் துறையின் மின்-தாக்கல் இணையதளத்தில்  செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 


இம்முறை மூலம் பான் கார்டு பெறுவதற்கு, வருமான வரித் துறையின் மின்-தாக்கல் (e-filing website) வலைதளத்திற்குச் சென்று, உங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP ஐ அந்த இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த செயல்முறை முடிந்ததும், 15 இலக்க ஒப்புதல் எண் (acknowledgment number) ஒன்று உருவாக்கப்பட்டு விண்ணப்பிப்பவருக்கு தரப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி இ-பான் கார்டை அதே தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். ஆதார் அட்டையுடன் ஈமெயில் முகவரி பதிவு செய்யப்பட்டிருந்தால், ஈமெயில் மூலமாக விண்ணப்பதாரருக்கு இ-பான் அனுப்பப்படும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்த ஆண்டு 1900; வயதோ 41; ஆதார் அட்டையால் தவியாய் தவிக்கும் பெண்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Born Andy 1900; Age 41; Woman struggling with Aadhaar card

 

ஆதார் அட்டையில் பிறந்த வருடம் பிழையாக இருப்பதால் பல வருடங்களாக அதை மாற்ற முடியாமல் திருச்சியை சேர்ந்த பெண் தவித்து வருகிறார்.

 

திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த கவிதா என்ற பெண் வைத்த கோரிக்கை தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவியின் பெயர் கவிதா. 41 வயதான கவிதா 1982ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு ஆதார் அட்டை கொடுக்கும் பொழுது அதில் பிறந்த வருடம் 1900 என அச்சிடப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், இதை மாற்றக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கவிதா அளித்த மனுவில், “எனது வாக்காளர் அடையாள அட்டையில் 3.5.1982 என எனது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ரேஷன் கார்டில் 41 வயது என்று உள்ளது. ஆனால் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் 1900 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டையின் படி எனக்கு 123 வயது. தற்போது ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்து ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதிலும் எனது வயது மாறுகிறது. ஆதார் அட்டையில் வயதை மாற்றக் கோரி 4 ஆண்டுகளாக அலைந்து வருகிறேன். ஆனால் மாற்ற முடியவில்லை. இதனால் பல இன்னல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். எந்த ஒரு நலத் திட்டமோ, வங்கியில் கடனுதவியோ எதுவும் வாங்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. எனவே, எனது வயதை மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

மேலும், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் எதுவும் பெற முடியாததால் பல சிக்கல்களை கவிதா அனுபவித்து வருவதாகவும் பிழையைத் திருத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Next Story

ஆதார் இருக்க ஐடி திட்டம் தேவையா?- தேமுதிக விஜயகாந்த் கேள்வி

Published on 08/01/2023 | Edited on 08/01/2023

 

Do you need an ID scheme to have Aadhaar?- Question by Dmdk Vijayakanth

 

'அரசின் அனைத்து சலுகைகளையும் மக்கள் பெறுவதற்கு ஆதார் எண் இருக்கும் பொழுது 'மக்கள் ஐடி திட்டம்' தேவையா?' என தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன் வந்தால் நாட்டில் குழப்பம் ஏற்படாதா? மத்திய மாநில அரசுகளின் சலுகைகளை பெற ஆதார் எண் இருக்கும்பொழுது மக்கள் ஐடி திட்டம் எதற்காக. தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்த பிறகு மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்துங்கள்' என தெரிவித்துள்ளார்.