Skip to main content

இப்படி சென்றால் ஹெல்மெட் இல்லாமல் போனாலும் ஃபைன் இல்லை..!

Published on 05/09/2019 | Edited on 06/09/2019


புதிய மோட்டார் வாகன சட்டப்படி ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நயின் என்பவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஹெல்மெட் அணியாத பலர் அபராதத் தொதையை கட்டுவதில் இருந்து தப்பித்து கொள்வதற்காக வண்டியை ஓட்டி செல்லாமல், தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். அந்த வீடியோவில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் குற்றம். ஆனால் நடந்து செல்வது அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 


அதில் பதிவிட்டுள்ள பங்கஜ் நயின், "தண்டத்தொகையை தவிர்ப்பதற்கான நல்ல நடைமுறைதான். தயவு செய்து சாலை விதிகளை மதித்து இதுபோன்ற இக்கட்டான சூழலை தவிருங்கள்' என்று அறிவுரை கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. இது நல்ல ஐடியாவாக தெரிந்தாலும் வண்டியை எல்லா இடத்திலும் தள்ளிக்கொண்டே செல்ல முடியாதே என்று பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Traffic diversion on OMR Road

சென்னை ஓஎம்ஆர் சாலையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஓஎம்ஆர் சாலையில் சோதனை அடிப்படையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சோழிங்கநல்லூரிலிருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும்.

மேலும் காமாட்சி மருத்துவமனை சந்திப்பிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ்காந்தி சாலையில்) திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

இதேபோல், கார்ப்பரேஷன் சாலையிலிருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ்காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய ‘யூ’ திருப்பத்தில் (U Turn) சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திருத்தப்பட்ட அபராதம்; தீவிர சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலர்கள் (படங்கள்) 

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

இன்று முதல் திருத்தப்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது உடனடி அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை அரும்பாக்கம் அண்ணா நூற்றாண்டு வளைவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்து விதிகளை மீறிய நபர்களிடம் அபராதம் வசூலித்தனர்.