farooq abdullah

Advertisment

ஜம்மு காஷ்மீரின்முன்னாள் முதல்வரும், தேசியமாநாட்டுக்கட்சியின் தலைவருமானபரூக்அப்துல்லா, தனது தந்தையும் தேசியமாநாட்டுக்கட்சியைநிறுவியவருமானஷேக்முகமது அப்துல்லாவின்39வதுநினைவு தினத்தையொட்டி ஸ்ரீநகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், காஷ்மீரில்எப்போது தேர்தல் நடைபெற்றாலும் அதில் பங்கேற்போம் எனவும், தேர்தலைநடத்துவதற்கு முன்பு மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு மாநிலஅந்தஸ்தைத்திரும்ப வழங்கவேண்டும்எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆப்கானிஸ்தான்தொடர்பான கேள்விஒன்றுக்குப்பதிலளித்தபரூக்அப்துல்லா, "தலிபான்கள்இஸ்லாமியக்கொள்கைகளைப்பின்பற்றி நல்லாட்சி வழங்குவார்கள் என்றும்மனித உரிமைகளை மதிப்பார்கள் எனவும்நம்புகிறேன். அனைத்து நாடுகளுடனும் நட்புறவை வளர்க்க அவர்கள்முயற்சிக்கவேண்டும்எனக்கூறியுள்ளார்.