ஹோண்டா நிறுவனம், தனது நிறுவனத்தின் கார்களின் விலையை ஜனவரி மாதம் முதல் உயர்த்தபோவதாக அறிவித்துள்ளது. வாகன உற்பத்தி உள்ளீடு செலவ 4% உயர்ந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இன்னும் குறிப்பிட்ட விலையையோ அல்லது சதவீதத்தையோ அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/honda-in.jpg)
ஏற்கனவே இதே காரணத்தினால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலையை 40,000 வரை உயரும் என அறிவித்திருந்தது. அதேபோல் நிசான் இந்தியா நிறுவனத்தின் கார்கள் 4% வரை விலை உயரும் என்றும், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார்கள் 2.5% விலை உயரும் என்றும், ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை 3% விலை உயரும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)