ஆனால், யாரும் இதற்காக முன்வராத நிலையில், பவானியின் உடல் நேற்று மதியம் வரை கிருஷ்ணாவின் வீட்டில் ஆதரவற்று கிடந்தது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சவுகத், ஹம்சா, நசீர், ரியாஸ் மற்றும் ஃபரூக் ஆகியோர் கிருஷ்ணாவின் வேண்டுகோளை ஏற்று, உடனடியாக நிதி திரட்டி பவானியின் இறுதிச்சடங்கை நடத்த முன்வந்தனர். அங்கன்வாடி ஊழியரான ராஜேஸ்வரி மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த சஃபியா, ஜூபைதா ஆகியோர் பவானியின் உடலை சுத்தம்செய்ய, இஸ்லாமிய இளைஞர்கள் அவரது உடலை புத்தூர் சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று இறுதிச்சடங்கை நடத்தினர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் பாராட்டி வருகின்றனர். நாங்கள் இதை பப்ளிசிட்டிக்காக செய்யவில்லை. பாதிக்கப்பட்டவரின் சாதி, மதம் கடந்து நாங்கள் உதவுவதற்காக முன்வந்தோம். இறந்தவர் யாராக இருந்தாலும் அவரது இறுதிச்சடங்கு முழுமையாக நடக்கவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம் என அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.