மத்தியப்பிரதேசம் மாநிலம் சியோனியில் மாட்டிறைச்சி கொன்று சென்ற 3 பேரை ஸ்ரீராம்சேனா அமைப்பை சேர்ந்த நபர்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ இனியத்தில் பரவி வருகிறது.

Advertisment

hindu people attacks islam people and compel them to say jai sriram

ஒரு பெண் உட்பட 3 இஸ்லாமியர்கள் ஆட்டோவில் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக வதந்தி கிளம்பியது. இதனை அடுத்து ஸ்ரீராம்சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் மூவரையும் தடுத்து நிறுத்தி ஆட்டோவில் இறுத்து வெளியே இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆண்களை மரத்தில் கட்டி வைத்து கம்பு மற்றும் பெரிய தடிகளால் தாக்கிய அந்த கும்பல், அதில் வந்த பெண்ணை, அவருடன் வந்த ஆண்களை கொண்டே தாக்க வைத்துள்ளது.

இறுதியாக மூவரையும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடும் படி வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இது தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.