Skip to main content

ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்!

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

 Hindi dumping in Jimper vck

 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக ஆங்கிலமும் இந்தியும் இருந்து வருகிறது, இந்நிலையில் இனி வரும் காலங்களில் இந்தியை மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். 


ஜிப்மர் இயக்குநரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதுச்சேரி மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜிப்மர் மருத்துவமனை எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்த நிலையில், காவல்துறையினரின் தடுப்புகளை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜிப்மர் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வாலின் உருவப்படம் மற்றும் சுற்றறிக்கை நகலை எரித்து போராட்டக்காரர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் இந்தியை கட்டாயமாக்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசு மற்றும் ஜிப்மர் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக, ஜிப்மர் மருத்துவமனையின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பை சார்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜிப்மர் மருத்துவமனை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாவேந்தர் பாரதிதாசன் பேரன் கோ.பாரதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.