கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். உலகம் முழுவதும் 18 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் இந்த வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலக அளவில் 213 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் சீனாவில் இருந்த 234 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு, சிறப்பு முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments