போலி சமூக வலைத்தள கணக்கு; ஆளுநர் எச்சரிக்கை

himachal pradesh governor name create fake instagram id 

சமீப காலமாகப் பிரபலங்கள் பெயரில் சமூகவலைத்தளங்கள் மூலம் போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் பணம் பறிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக் பெயரில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில்போலி கணக்குகளை உருவாக்கி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்துஆளுநரின் கவனத்திற்குச் சென்றதும்தன்னுடைய சமூக வலைத்தள கணக்கின்மூலம்யாராவது பணம் கேட்டால்யாரும் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று பணம் பறிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் இந்த போலி சமூக வலைத்தள கணக்குகளை நீக்கும்படி இன்ஸ்டாகிராம் நிறுவனத்தைஹிமாச்சல பிரதேச போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாநிலத்தின் ஆளுநர் ஒருவரின் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகளை உருவாக்கி பணம் பறிக்க முயன்ற சம்பவம் ஹிமாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

governor instagram
இதையும் படியுங்கள்
Subscribe