Skip to main content

இலவச கரோனா தடுப்பூசிகளால் பெட்ரோல் விலை உயர்வு - மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

mos petroleum

 

இந்தியாவில்  பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதே காரணம் எனத் தெரிவித்துள்ளார். 

 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இதுதொடர்பாக கூறியதாவது; பெட்ரோல் ஒன்றும் விலை உயர்வானது அல்ல. மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்துள்ளன. நீங்கள் கரோனா தடுப்பூசிகளை இலவசமாகப் பெறுகிறீர்கள். கரோனா தடுப்பூசிகளுக்கான பணம் எங்கிருந்து வரும்? நீங்கள் தடுப்பூசிகளுக்குப் பணம் செலுத்துவதில்லை. தடுப்பூசிகளுக்கான விலை இந்த வரிகளிலிருந்து வருகிறது.

 

நமது அரசு 130 கோடி மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை சுமார் 1,200 ரூபாய். ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 40 ரூபாய்தான். மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்துள்ளன. நாட்டில் குறைந்தபட்ச மதிப்பு கூட்டப்பட்ட வரி விதித்துள்ள ஒரே மாநிலம் அசாம் தான். பெட்ரோல் மீது அந்த மாநிலமானது 28 ரூபாயை மதிப்பு கூட்டு வரியாக விதித்துள்ளது. எங்கள் அமைச்சகம் (மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை) 30 ரூபாயை வரியாக விதித்துள்ளது.

 

நீங்கள் இமயமலை நீரைக் குடிக்க விரும்பினால், ஒரு பாட்டிலுக்கு ரூ .100 ஐ செலுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே உயரும். எங்கள் அமைச்சகம் எண்ணெய் பொருட்களின் விலையை நிர்ணயிக்கவில்லை. வர்த்தக துறை அதை நிர்ணயிக்கிறது. நிர்ணயிக்கப்படும் விலை சர்வதேச சந்தையுடன் தொடர்புடையது. அண்மையில் எங்களது அமைச்சகத்தின் நிதி கரோனா சூழ்நிலையை சமாளிக்க சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குத்  திருப்பிவிடப்பட்டது. 

இவ்வாறு ராமேஸ்வர் தெலி தெரிவித்தார். 

 

மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய அசாம் மாநில பாஜக தலைவர், ஒரு மோட்டர் சைக்கிளில் மூன்று பேர் செல்ல வேண்டும் எனவும், மக்கள் நடக்க பழக வேண்டும் எனவும் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.