ADVERTISEMENT

கேரளாவில் பொருளாதார நெருக்கடி? - உயர்நீதிமன்றம்

01:16 PM Nov 02, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளா மாநிலத்தில், கேரளா அரசின் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த நிதி நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடன் கொடுத்த வகையில் ரூ.900 கோடி பணம் இன்னும் திரும்ப வரவில்லை. இதனால், எங்களுடைய நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனவே, அந்த பணத்தை உடனே வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

இது தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதனால், போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்திற்கு பண உதவி செய்ய முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த பதில் மனுவை நேற்று (01-11-23) பரிசீலித்த உயர்நீதிமன்றம், கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உயர்நீதிமன்றம், ‘கேரள அரசின் விளக்கம் கேரளாவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அரசின் இந்த விளக்கத்தை வைத்துத்தான் தேசிய அளவில் கேரளா குறித்து பேசப்படும். நிதி நிலைமை மோசமாக இருந்தால், கேரளாவின் பொருளாதார நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டிய நிலை வரும். அதற்கான உரிமை உயர்நீதிமன்றத்திற்கும் உண்டு. அரசு உத்தரவாதத்தை நம்பித் தான் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர். கேரளாவில் இந்த நிலை நீடித்தால் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். எனவே, அரசு வேறு ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT