Advertisment

ஹெலிகாப்டர் விபத்து: நான்கு விமானப்படை அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு!

bipin rawat

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்றுபிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தும், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். பிபின் ராவத்தின் மனைவியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு. இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்(9.12.2021) அவர் பெங்களூருவில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisment

இதற்கிடையே பிபின் ராவத், அவரது மனைவிமதுலிகா ராவத் உள்படவிபத்தில் உயிரிழந்த நால்வரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து அந்த நால்வரின் உடல்களில், பிபின் ராவத்,மதுலிகா ராவத், பிரிகேடியர் லிட்டர் ஆகியோரின் உடல்கள் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன.

Advertisment

இந்தநிலையில், விபத்தில்உயிரிழந்த இரு கமாண்டோ வீரர்களின்உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், இரு வீரர்களின் உடல்களும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகாவும் இன்று (11.12.2021) காலை அறிவித்த இந்திய இராணுவம், தற்போது நான்கு இந்திய விமானப்படை அதிகாரிகளின்உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

helicopter
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe