ADVERTISEMENT

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து - விசாரணைக்கு விமானப்படை உத்தரவு!

01:56 PM Dec 08, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகளோடு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இதுவரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், அதை இந்திய விமான படை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT