Skip to main content

டெல்லியில் பலத்த சூறைக்காற்றுடன் பொழிந்த பலத்த மழை! 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

Heavy rains with thunderstorms in Delhi!

 

டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பொழிந்ததன் காரணமாக, 40- க்கும் அதிகமான விமானங்கள் தாமதமடைந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

 

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், மணிக்கு 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு, ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, அதிகாலை 03.00 மணி முதல் பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பொழிந்தது. கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டனர். 

 

Heavy rains with thunderstorms in Delhi!

 

அந்த பகுதிகளிலும் மழை நீர் தேங்கியிருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 40- க்கு அதிகமான விமானங்கள், தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இரண்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இன்று மாலையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.