Skip to main content

"கரோனா தடுப்பூசி போடலயோ... தடுப்பூசி.." மக்களை கூவிக் கூவி அழைக்கும் சுகாதார ஊழியர்கள்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

fg


இந்தியாவில் கரோனா தொற்று மே மாதம் வாக்கில் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராக குறைந்துவருகிறது. அந்த எண்ணிக்கையும் கூட ஒரே சீராக இல்லாமல், மாறுதலுக்குள்ளாகிவருகிறது. இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது. இதுவரை 83 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டும் இந்த எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஒருபுறம் கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கான வாய்ப்புகள் அமைந்தும் பலர் அதனைப் பயன்படுத்திக்கொள்ளாத நிலையும் இந்தியாவில் தொடர்ந்து இருந்துவருகிறது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அதில், மருத்தவப் பணியாளர்கள் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக வருவதும், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், முதல் டோஸ், இரண்டாவது டோஸ் என்று அவர்கள் அந்த வீடியோவில் கூறுவதும் பதிவாகியுள்ளது. அவர்கள் அவ்வாறு தொடர்ந்து கூறினாலும், அந்த தெருவில் இருந்த வீட்டிலிருந்து யாரும் தடுப்பூசி போட முன்வரவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் - பூஸ்டர் டோஸ் செலுத்துக்கொள்ள அறிவுறுத்தல்

Published on 07/08/2022 | Edited on 07/08/2022

 

corona Vaccination Camp in Tamil Nadu today

 

தமிழகத்தில் இன்று கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.

 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

இந்த முகாமில், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸும் செலுத்தப்படுகிறது.பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

Next Story

தமிழகத்தில் 31- வது கரோனா தடுப்பூசி முகாம் துவங்கியது!

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

The 31st corona vaccination camp has started in Tamil Nadu!

 

தமிழகம் முழுவதும் இன்று (10/07/2022) ஒரு லட்சம் இடங்களில் 31-வது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

 

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிப் போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 45 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் இரண்டாவது தவணை செலுத்தாதவர்கள், ஆறு மாத கால இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என மாநிலத்தில் 1 கோடியே 45 லட்சம் பேர் உள்ளனர். 

 

அவர்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 78 லட்சத்து 78 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.