Skip to main content

இந்த மோசமான நிலையை நவம்பர் மாதமே தெரிவித்த சுகாதர நிலைக்குழு - கண்டுக்கொள்ளாத மத்திய அரசு..!

Published on 29/04/2021 | Edited on 29/04/2021
The Health Committee which reported this bad situation in November itself - the unseen Central Government

 

கரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என கடந்த நவம்பர் மாதமே சுகாதரத்திற்கான நாடளுமன்ற குழு கணித்து வெளியிட்டிருந்தது. இதனை மத்திய அரசு பொருட்படுத்தாமல் இருந்ததன் காரணமே மோசமான நிலையை தற்போது நாடு சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தொடங்க இருப்பதையும் அதன் விளைவுகளையும் சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த நவம்பரில் அறிக்கையாக தாக்கல் செய்திருந்தது.

 

சமாஜ்வாதி கட்சி ராஜ்கோபால் தலைமையிலான 31 எம்.பி.க்கள் அடங்கிய நிலைக்குழு தமது அறிக்கையை கடந்த நவம்பர் 21ஆம் தேதி மாநிலங்கவை தலைவரிடமும் 25 ஆம் தேதி மக்களவை சபாநாயகரிடமும் அளித்துள்ளது. இதை தொடர்ந்து 190 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிப்ரவரி 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று பரவல் மேலாண்மை என்ற இந்த அறிக்கையில் கரோனாவை எதிர்கொள்வதில் நாட்டிற்கு உண்டான பலம், பலவீனம் , வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்டவை விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.

 

குறிப்பாக நாட்டில் கரோனா இரண்டா அலை ஏற்படும் என கணித்திருந்தது. இரண்டாவது அலையின் விளைவுகள் இது வரை நாடு சந்திக்காத வகையில் மோசமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கரோனாவின் தாக்கலில் ஐரோப்பிய நாடுகள் சிக்கி சீரழிந்தது போன்று இரண்டாம் அலையின் போது இந்தியால் மோசமான நிலை ஏற்படும் என அறிக்கையில் எச்சரித்து இருந்தது தெரிய வந்துள்ளது. இரண்டாவது அலையை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டிய கட்டாயம் குறித்தும் நாடளுமன்ற நிலைக்குழு விரிவாக விளக்கியிருந்தது.

 

கரோனா முதல் அலையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இரண்டாவது அலையை எதிர்கொள்ள வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருந்துகள் என்பன போதுமான அளவில் கையிருப்பில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வரும் காலங்களில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக பெரிய கூட்டங்கள் கூடுவதை கட்டாயம் தடுக்க வேண்டும் என நிலைக்குழு அப்போதே பரிந்துரை செய்தது. நாடெங்கும் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள மாநிலங்களை கண்டறிந்தும் அங்கு உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஊரக பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சுகாதர வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. சுகாதார பணிகளுக்கு போதுமான நிதிகளை ஒதுக்கீடு செய்வது அவசியம் என்று கூறிய நாடளுமன்ற நிலைக்குழு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளில் ஒருங்கிணப்பு இல்லாததை சுட்டிக்காட்டி அவற்றை கலைய வேண்டியது அவசியம் என தெரிவித்திருந்தது. ஆனாலும் நிலைக்குழுவின் இந்த முக்கியதுவம் வாய்ந்த அறிக்கையை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்ட பிரச்சனைக்களுக்கான தீர்வு காண மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுகாதரத்திற்கான நிலைக்குழுவில் இடம்பெற்ற எம்.பி’க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாகவே கரோனா 2வது அலை நாட்டையே புரட்டுப்போட்டிருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்று அறிவிக்கப்பட உள்ளதா தேர்தல் தேதி?

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Election date to be announced today?

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று அல்லது நாளை நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் இருவர் பதவியேற்ற நிலையில் விரைவில் அட்டவணை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சாந்து சற்றுமுன் பதவி ஏற்று கொண்டனர். அதேநேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. இதனால் இன்று அல்லது நாளை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாநிலங்களில் இருந்து ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியிடம் முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை 

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Former ministers talk to Krishnasamy

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது. பாமக, தேமுதிக,புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கே சென்று ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.