இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான எச்.சி.எல், ஐ.பி.எம் நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட சில மென்பொருள்களை 1.8 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. எச்.சி.எல் நிறுவனத்தின் வரலாற்றிலே அதிக தொகைகொடுத்து வாங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. எச்.சி.எல் நிறுவனம் வாங்கப்போகும் ஐ.பி.எம் மென்பொருள்களின் சந்தை மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் என எச்.சி.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
எச்.சி.எல் வரலாற்றிலே இதுதான் முதல் முறை...
Advertisment