மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் குஜராத்தின் சுரேந்தர்நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஹர்டிக் படேலை திடீரென மேடைக்கு வந்த ஒருவர் அவரது கன்னத்தில் அறைந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் சுதாரிப்பதற்குள் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அறைந்த நபரை அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.
#WATCH Congress leader Hardik Patel slapped during a rally in Surendranagar,Gujarat pic.twitter.com/VqhJVJ7Xc4
— ANI (@ANI) April 19, 2019