Advertisment

கஜா புயல் தமிழக டெல்டா பகுதிகளை சின்னாபின்னமாக்கியுள்ளது. பல்வேறு மக்களுக்கு நிவாரண மையத்தி உண்ண உணவு இன்றி தவிக்கும் அளவிற்கு நிவாரண மையங்களில் நிவாரண பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. தற்போது பொது மக்கள் தாமாகவே முன் வந்து, டெல்டா பகுதி மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல பிரபங்கள் சிலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், டெல்டா மக்களுக்கு உதவுவோம் என்று தமிழில் பதிவிட்டு அந்த மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.