பாஜக வின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு காலமானார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்நிலையில் காதலியை தேடி சென்று பாகிஸ்தான் நாட்டில் சிக்கியிருந்து, பின்னர் சுஷ்மா ஸ்வராஜின் முயற்சியால் மீட்கப்பட்ட இளைஞரான ஹமீது அன்சாரி, சுஷ்மாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "சுஷ்மா ஸ்வராஜ் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நான் நாடு திரும்புவதற்காக அவர் செய்த முயற்சிகள் மிகப்பெரியது. அவர் எனக்கு தாய் போன்றவர். நான் பாகிஸ்தானில் இருந்து திரும்பிய பின்னர் எனக்கு நல்லமுறையில் வழிகாட்டினார். என் வாழ்கையில் இனி என்ன செய்ய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். அவரது மரணம் எனக்கு மிகப்பெரிய பேரிழப்பு. எனது தாயை இழந்தது போன்று உணர்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.