Skip to main content

ஹஜ் யாத்திரைக்கு மானியம் நிறுத்தப்பட்டதால், அரசுக்கு 57 கோடி மிச்சம்: முக்தர் அப்பாஸ் நக்வி!

Published on 01/07/2018 | Edited on 01/07/2018


ஹஜ் யாத்திரைக்கு மானியம் நிறுத்தப்பட்டதால், அரசுக்கு இந்தாண்டு 57 கோடி மிச்சமாகும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் புனித யாத்திரை பயனமான ஹஜ் பயணத்திற்கு இந்தியாவில் இருந்து செல்லும் முஸ்லிம் மக்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு மானியம் அளித்து வந்தது. இந்தாண்டு முதல் இது நிறுத்தப்பட்டு, இந்த மானியம் சிறுபான்மையினரின் கல்விக்காக செலவிடப்படும் என கடந்த ஜனவரியில் மத்திய அரசு அறிவித்தது.

 

 

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த பயணத்துக்கான ஒருங்கிணைப்பாளர்கள், உதவி ஹஜ் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சி முகாம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய சிறுபான்மையின விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்று பேசியபோது,

இந்தியா விடுதலை அடைந்த பிறகு முதல் முறையாக சாதனை அளவாக, இந்தாண்டு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்தியர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். இதில், 47 சதவீதம் பேர் பெண்கள் என்பது மற்றொரு சாதனை. மேலும், இந்த ஆண்டு 1308 பெண்கள் ஆண் துணையின்றி தனியாக செல்கின்றனர் இவர்களுக்கு உதவுவதற்காக சவுதி அரேபியாவில் 98 உதவியாளர்களும் நிறுத்தப்படுவார்கள்.

கடந்தாண்டு 1 லட்சத்து 24 ஆயிரத்து 852 ஹஜ் பயணிகளுக்காக விமான கட்டணமாக ரூ.1030 கோடி செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு இந்திய ஹஜ் கமிட்டி மூலம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 1,28,702 பேருக்காக ரூ.973 கோடி விமான கட்டணமாக செலுத்தபட உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.57 கோடி குறைவாகும். இது, மானியத்தொகை நிறுத்தப்பட்டதால் கிடைக்கும் மிச்சமாகும் என அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

2019ல் பா.ஜ.க.வை தோற்கடிப்போம்! - போர்க்கொடி தூக்கும் சாமியார்

Published on 05/06/2018 | Edited on 05/06/2018

2019ஆம் ஆண்டில் பா.ஜ.க.வைத் தோற்கடிப்போம் என மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸ் எனும் சாமியார் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
 

param

 

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அதேபோல், 2017ஆம் ஆண்டு உபி சட்டமன்றத் தேர்தலிலும் அதே வாக்குறுதியையே பா.ஜ.க. அளித்திருந்தது. அதேசமயம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்தவண்ணமே உள்ளன. 
 

mukthar

 

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு பா.ஜ.க. வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். மேலும், இந்துத்வா மற்றும் ராமர் கோவில் போன்றவற்றைத் தவிர்த்து வளர்ச்சி, மேம்பாடு குறித்தே வருங்காலங்களில் திட்டங்கள் தீட்டப்படும் எனவும் பேசினார். 
 

இதையடுத்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சவானி கோவில் சாமியார் மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸ், முக்தர் அப்பாஸ் நக்வியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், 2019ஆம் ஆண்டு பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்றால், அவர்கள் உடனடியாக அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டிமுடிக்க வேண்டும். இல்லையென்றால், பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு இயக்கத்தை உருவாக்கி, அடுத்த தேர்தலில் நிச்சயமாக தோற்கடிப்போம். பா.ஜ.க.வை தோற்கடிப்பது எப்படி என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும் பேசியுள்ளார்.