Skip to main content

உடல்தகுதி சோதனையில் ஆடைகள் இன்றி நிற்கவைத்து சோதிக்கப்பட்ட பெண்கள்... குவியும் கண்டனங்கள்...

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

பெண்களுக்கு எதிரான அதிகார மீறல்கள், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல்கள் இந்திய அளவில் வட மாநிலங்களில் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக பெண்களை அவமானப்படுத்தி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டு பாதிக்கப்படுவர்களை அவமானப்படுத்தும்  சம்பவங்களும் அவ்வப்போது வட இந்தியாவில்  நடந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக இப்போது பெண் ஊழியர்களை நிர்வாணமாக சோதனை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நடந்தது, இந்தியப் பிரதமர் மோடி மூன்று முறை முதல்வராக இருந்த மாநிலமான குஜராத்தில் தான்.

 

Gujarat ந்omen trainee clerks medical test issue

 

 

இங்குள்ள சூரத் மாநகராட்சியில் பயிற்சி பெண் ஊழியர்கள் பத்து பேர் பயிற்சி காலத்தை முடித்து மாநகராட்சியில் நிரந்த ஊழியர்களாக பணி நியமனம் பெறுவதற்கு மருத்துவ பரிசோதனையில் கலந்துகொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக தகுதி பெற்றவர்களா என்பதை கண்டறியும் இந்த சோதனைக்காக 20 ந் தேதி காலை சூரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்கு தேர்வான 10 பெண்களும் சென்றுள்ளனர். பிறகு அவர்கள் மகளிர் வார்டுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு வந்த பெண்களை ஆடைகளை கலைத்துவிட்டு சோதனைக்கு வருமாறு பெண் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

ஒவ்வொருவராக உடல் பரிசோதனை செய்வார்கள் என்று ஒரு பெண் ஊழியர் மட்டும் உள்ளே சென்றிருக்கிறார். ஆனால், ஒவ்வொருவராக பார்க்க முடியாது என கூறி ஒரே நேரத்தில் அனைத்து பெண்களையும் ஒன்றாக சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. வேறு வழியில்லை, உடல் தகுதியில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே வேலை கிடைக்கும் என்பதால், 10 பெண் ஊழியர்களும் சோதனைக்கு தயாராகியுள்ளனர். பிறகு, "உங்களுக்கு திருமணமானதா? எத்தனை குழந்தைகள், இப்போது கர்ப்பமாக இருக்குறீர்களா?" என பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதேபோல திருமணமாகாத பெண்களிடமும் கர்ப்பம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படியொரு அதிர்ச்சியான சம்பவத்தை வெறும் உடல் தகுதி தேர்வுக்காக நடத்தப்பட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கொதித்தெழுந்துள்ள மாநகராட்சி பணியாளர் சங்க செயலாளர் அகமது ஷேக், இதை கண்டித்து அறிக்கை விட்டதோடு மாநகராட்சி நிர்வாகத்திடமும் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் டாக்டர் கல்பனா தேசாய், மாநகராட்சி அதிகாரிகள் காயத்ரி, திருப்திகலாதியா ஆகிய மூவர் அடங்கிய விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பத்து நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு அறிக்கை கொடுக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் தகுதி தேர்வு நடத்துவதின் விதிமுறைகள், பின்பற்றவேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றையெல்லாம் அறியாமல், உடல் தகுதி தேர்வு செய்ய வந்த அதிகாரிகள் ஆணவப் போக்கோடு செயல்பட்டுள்ளனர் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இதற்கு முன்பு நடைபெற்ற சோதனைகள் அனைத்தும் சரியான வழிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டதா அல்லது, இதேபோன்று தான் நடத்தப்பட்டதா எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளர் வெற்றி; “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வந்துவிட்டது” - ராகுல் காந்தி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உள்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வந்துவிட்டது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக, மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது மற்றொரு படியாகும். மீண்டும் சொல்கிறேன், இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

மக்களவைத் தேர்தல்; போட்டியின்றி தேர்வான பா.ஜ.க வேட்பாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
BJP candidate selected without competition at Lok Sabha elections

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.