Advertisment

மணமேடையிலேயே மயங்கி விழுந்து மணப்பெண் மரணம்; தடையில்லாமல் நடந்த திருமணம்

gujarat marriage bride incident viral 

Advertisment

திருமணத்தின் போதுமணமகள்மயங்கி விழுந்து இறந்த நிலையில் அவரின் தங்கையுடன்மணமகனுக்குத் திருமணம் நடந்த சம்பவம் தற்போது வைரலாகிவருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சுபாஷ் நகர் என்ற பகுதியில் விஷால்என்பவருக்கும்ஹித்தல் என்ற இளம்பெண்ஒருவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 25 ஆம் தேதி திருமணம்நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்குத்தயாராகஇருந்த மணமகளுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டதால் மணமேடையிலேயே மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்த ஹித்தலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மணமகள் ஹித்தலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹித்தல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத்தெரிவித்துள்ளனர்.

இதனால்அதிர்ச்சி அடைந்த ஹித்தலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்த நிலையில் மணமகள் உயிரிழந்ததால்திருமணம்நின்று போனது. இருப்பினும் அங்கு இருந்தவர்கள் ஹித்தலின் தங்கையை விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, விஷாலுடன் ஹித்தலின் தங்கையைதிருமணம்செய்து வைத்தனர். தற்போது இந்த செய்திசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

VIRAL marriage Gujarath
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe