Skip to main content

மார்ச் 9 முதல் பப்ஜி விளையாட்டுக்கு தடை...!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

பப்ஜி விளையாட்டின் மூலமாக மாணவர்கள் சரியாக அவர்களின் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை, தேர்வுகளிலும் சரியாக கவனம் செலுத்துவதில்லை என பல் வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது.
 

pubg

 

முதல் முறையாக சில மாதங்களுக்குமுன் வேலூர் பல்கலை கழகத்தில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது. அதன் பின் தற்போது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சூரத் மாவட்டத்தில் இந்த விளையாட்டை தடை செய்யப்போவதாக அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  


மேலும், குஜாராத் மாநிலம் சூரத் மாவட்ட நிர்வாகம் பப்ஜி விளையாட்டை தடை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சூரத் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கையில், ‘பப்ஜி விளையாட்டு மார்ச்  9 முதல் தடை செய்யப்படவுள்ளது. பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கான சுற்றறிக்கை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில் மீண்டும் பப்ஜி!!

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

Pubg is back in India

 

பிரபல மொபைல் கேம் 'பப்ஜி' இந்தியாவில் மீண்டும் வரவிருக்கிறது. 

 

தென்கொரிய நாட்டின் பப்ஜி மொபைல் விளையாட்டு செயலி உலக அளவில் பிரபலமானது. இச்செயலியை இந்தியாவில் வெளியிடும் மற்றும் நிர்வகிக்கும் உரிமையை சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனத்திற்கு பப்ஜி நிறுவனம் வழங்கியிருந்தது. 

 

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் நலன் கருதி இந்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு தடை விதித்தது. குறிப்பாக பப்ஜி விளையாட்டில் ஈடுபட்ட பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்ததால் இந்த விளையாட்டு கடந்த ஆண்டு இந்திய அரசால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 

 

இந்நிலையில், இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு ஏற்றவாறு பப்ஜி விளையாட்டை மாற்றி அமைத்து மீண்டும் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு வருகிறது. இது குறித்து மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாடு, மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது மூன்று மாத சோதனை அடிப்படையில் இந்த விளையாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

பப்ஜி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி இளைஞர் திடீர் தற்கொலை... போலீசார் விசாரணை!

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

pubg Police investigation!

 

சென்னை தாம்பரம் அருகே கல்லூரி இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த நிலையில்,  திடீரென அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே 'பப்ஜி' எனும் மொபைல் கேமை விளையாடி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அருண்குமார் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்ட நிலையில் அருண்குமார் பப்ஜி விளையாடி கொண்டிருந்துள்ளார். அவரது குடும்பத்தார் வீடு திரும்புகையில் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த இளைஞனின் அண்ணன் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பொழுது அருண்குமார் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.