தனது மாட்டை தாக்க வந்த சிங்கத்தை நேருக்கு நேர் நின்று அடித்து விரட்டிய விவசாயி ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத்தின் கிர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள அம்ரேலி பகுதியில் நேற்று முன்தினம் இரவு கால்நடைகளை விரட்டி வந்த சிங்கத்தை, விவசாயி ஒருவர் பிரம்பால் விரட்டி அடித்துள்ளார்.
தனது மாடுகளை வேகமாக சிங்கம் விரட்டி வந்த நிலையில், கையில் பிரம்புடன் கூச்சல் போட்ட விவசாயி, பின்னர் துணிச்சலாக சிங்கத்தை நோக்கி பிரம்பை வீச, சிங்கம் திரும்பி ஓடியது. மாட்டிற்காக தனது உயிரை பணயம் வைத்து சிங்கத்தை நேருக்கு நேர் சந்தித்த விவசாயியின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.