Skip to main content

விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்; சிறுவன் உட்பட மூவர் பலி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

gujarat ambulance came tirunelveli incident karnataka 

 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கனகமணி (வயது 72). இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் திருநெல்வேலியை சேர்ந்த உறவினர்கள்  ஏராளமானோர் அங்கு வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கனகமணியின் உறவினர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது உடலை சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கொண்டு செல்ல அங்கு இருந்தவர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

இதையடுத்து இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதன் மூலம் இறந்தவரின் உடலை கொண்டு திருநெல்வேலிக்கு புறப்பட்டு உள்ளனர். அந்த ஆம்புலன்சில் இறந்தவரின்  உடலுடன் கனகமணி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த அவரது உறவினர்களான சேர்ந்த ஞானசேகர் (வயது 51), மௌலிராஜ் (வயது 45) மற்றும் சிறுவன் ஆகாஷ் (வயது17) ஆகியோர் இருந்துள்ளனர்.

 

இதையடுத்து இவர்கள் வந்த ஆம்புலன்ஸ் நேற்று அதிகாலை 4 மணியளவில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது தூக்கக் கலக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் இருந்துள்ளார். இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் முன்பகுதி மிகுந்த சேதமடைந்தது. இதில் ஆம்புலன்சின் டிரைவர், திருநெல்வேலியை சேர்ந்த கனகமணி மற்றும் ஆகாஷ் ஆகியோர் உயிரிழந்தனர். ஞானசேகர் மற்றும் மௌலிராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குஜராத்தில் இறந்தவரின் உடலையும், ஆம்புலன்ஸ் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் திருநெல்வேலிக்கு மற்றொரு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். மேலும் குஜராத் ஆம்புலன்ஸ் டிரைவரின் உடலும் வேறொரு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவரின் உடலை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.