Advertisment

ஜி.எஸ்.டி. ஓராண்டு நிறைவு... கொண்டாட்டத்திற்கு தயாராகிய மத்திய அரசு

gst

'ஒரே நாடு, ஒரே வரி' என்ற கொள்கையின் அடிப்படையில், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிசட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடரப்பட்டது.

Advertisment

இதில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் புதிய வரி விதிப்பு முறையைதொடங்கி வைத்துஅப்போது அமலில் இருந்த 12-க்கும் அதிகமான வரி விதிப்பு முறைகளை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதன்பின் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் ஜி.எஸ்.டி அமலுக்கு வந்து நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. அதனால் நாளை ஜூலை 1-ம் தேதி 2018 ஜி.எஸ்.டி நாளாக மத்திய அரசு கொண்டாட உள்ளது. இந்திய வரிவிதிப்பில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தம் கொண்டு வந்ததை நினைவுகூறும் வகையில் முதலாம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. நாளைய தினம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும்ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லி அம்பேத்கர் பவனில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் நிதி மந்திரி பியூஷ் கோயல், தொழில் நிறுவன கூட்டமைப்புகள்வர்த்தக சங்கங்கள் மற்றும் வரித்துறை அதிகாரிகள், ஸ்ரீ ஷிவ் பிரதாப் சுக்லா ஆகியோர்கலந்து கொள்கிறார்.

modi GST
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe