Groom passed away after consuming poison on wedding day, bride worried in hospital

மத்தியப்பிரதேச மாநிலத்தில் திருமண நாளன்று மணமகன் மற்றும் மணமகள் இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும்பரபரப்பைக்கிளப்பியுள்ளது.

Advertisment

மத்தியப்பிரதேச மாநிலம்இந்தூரைசேர்ந்தமணமக்களுக்குகடந்தசெவ்வாய் கிழமைஅன்றுஆர்யசமாஜ்கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் திருமண தினத்தன்று மணமகன் விஷம் குடித்துள்ளார்.இவரைத்தொடர்ந்து மணமகளும் விஷம் குடித்துள்ளார்.இதனால்அதிர்ச்சியடைந்தஅவர்களதுபெற்றோர்கள் இருவரையும்மருத்துவமனையில்சேர்த்த நிலையில் மணமகன் உயிரிழந்தார். மணமகள் தீவிரசிகிச்சைபிரிவில் கவலைக்கிடமாகசிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இந்த சம்பவம் குறித்துவழக்குப்பதிவு செய்துபோலீசார்விசாரித்ததில், திருமணம் நடப்பதற்கு முன்பாக கடந்த பல நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகள் மணமகனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தன்னுடைய தொழில் காரணமாக திருமணம் இப்போது வேண்டாம் என்று கூறி மணமகன் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளார்.

இதனால் அதிருப்தியான மணமகள்போலீஸ்புகார் தெரிவிக்கவே, மணமகன் உடனடியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் மணமகன் விஷம்குடித்துள்ளார். இதனை மணமகன் மணமகளிடம் கூற, அவரும் விஷம் குடித்துள்ளார் என்பது தெரியவந்தது.