Advertisment

மணிப்பூர் கலவரம்; கண்டவுடன் சுட உத்தரவு

Governor orders to shoot rioters on sight in Manipur

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராகபிரேன்சிங்இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில்மெய்டீஸ்எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர்தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநிலஅரசுக்குகோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத்தீ வைக்கும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. முன்னதாக மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனைமேரி கோம்தனது ட்விட்டர்பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்”எனப் பதிவிட்டுபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்ராஜ்நாத் சிங்ஆகியோரைடேக்செய்திருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து மணிப்பூர் முதல்வர்பிரேன்சிங், “இந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. இவை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தவறான புரிதல்களால் நடந்துள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றார்.இந்த நிலையில் கலவரக்காரர்களைக் கண்டவுடன் சுட,அம்மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரத்தைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாகஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

governor manipur shoot
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe