Published on 14/12/2020 | Edited on 14/12/2020
![governor car](http://image.nakkheeran.in/cdn/farfuture/Yb7yMpBdJbtYEOtHiPer2w6uUiuqojO8qjOv9sM8KoU/1607955361/sites/default/files/inline-images/gc-im.jpg)
இமாச்சலப் பிரதேசத்தின் தற்போதைய ஆளுநராக இருப்பவர் பண்டாரு தத்தாரேயா. இவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இவர் இன்று, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத்திலிருந்து நல்கொண்டா மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென, அவரது கார் விபத்தில் சிக்கியது.
அதிர்ஷ்டவசமாக, ஆளுநர் பண்டாரு தத்தாரேயாவுக்கும், அவருடன் பயணம் செய்தவர்களும் எந்தக் காயமுமின்றி தப்பித்தனர். திடீரென்று வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.