Skip to main content

புலம்பெயர்வில் இறந்தவர்கள் விவரம் அரசிடம் இல்லை!!! கைவிரித்த மத்திய அரசு...

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

The government does not have the details of those who died in the diaspora

 

 

உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட கரோனா, இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைத்து நாளொரு மேனியும் பொழுதொரு எண்ணிக்கையுமாக பெருகிவருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கியதையடுத்து, கரோனா கால புலம்பெயர்வுகள், மரணங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

 

அப்போது மாநிலவாரியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த எண்ணிக்கையைத் தெரிவித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், “உத்தரப்பிரதேசத்துக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து 32 லட்சம்பேர் திரும்பியுள்ளனர். பீகாருக்கு 15 லட்சம் பேரும், ஒட்டுமொத்தமாக 1 கோடியே நான்கு லட்சம் பேரும் கரோனா காரணமாக தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர்” என தெரிவித்தார். 

 

கேரளா மற்றும் தமிழகத்தில்தான் கரோனா காரணமாக குறைந்த அளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். தமிழகத்துக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,050 ஆகும். அதேசமயம் கரோனா ஊரடங்கில் புலம்பெயர்ந்தபோது இறந்தவர்களின் விவரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது மத்திய அரசு இதுகுறித்து தன்னிடம் எந்த புள்ளிவிவரமும் இல்லையென மறுத்துள்ளது. அதனால் யாருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளது. ரயிலிலும், சாலையிலும், கால்நடையாகவும் புலம்பெயர்ந்தபோது விபத்திலும் உடல்நலக்குறைவு காரணமாகவும் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 198 என சேவ் லைஃப் பவுண்டேஷன் அமைப்பு மே 31-ஆம் தேதி தெரிவித்திருந்தது.

 

இத்தகைய கொடூர தொற்று நிலவும் காலகட்டத்தில் இடம்பெயரும் தொழிலாளர்களை தேசமே கண்கொண்டு பார்த்த நிலையில் அதுகுறித்து உரிய தரவுகள் இல்லையென மத்திய அரசு கூறுவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

“ஒரு தனியார் அமைப்பு இத்தனை சீரியஸாக இறந்தவர்களின் எண்ணிக்கையை அக்கறையுடன் கணக்கிடமுடியும்போது, அரசாங்கம் இன்னும் எளிதாகவும் துல்லியமாகவும் இந்த கணக்குகளை பதிவிடமுடியும். நம் அரசாங்கம் இத்தகைய தரவுகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்” என சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.