தெலுங்கானாவில் அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில், 6 குழந்தைகள் உட்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஜெகதலா அருகே இன்று பகல் 11.45 மணி அளவில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 70 பேரில், 6 குழந்தைகள் உட்பட 40 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகள் குறித்து மேற்பார்வையிட்டார். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தெலுங்கானா காபந்து முதல்வர் சந்திரசேகர் ராவ் ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறும்போது, அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிவந்ததும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஜதராபாத்தில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள குண்டகட்டா மலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பக்தர்களை ஏற்றி திரும்பி வரும் வழியிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நித உதவி! - காபந்து முதல்வர் அறிவிப்பு!
சார்ந்த செய்திகள்
Next Story
விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து மீது வழக்கு இல்லையா?
சென்னையை அடுத்த மணலி பகுதியிலிருந்து பிராட்வே நோக்கி நேற்று காலை (11-01-24) மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, பேசின் பிரிட்ஜ் பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்றுகொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் லேசான காயங்களுடன் தன்வாய்ப்பாக உயிர்த் தப்பினர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் தனது மோட்டார் சைக்கிளுடன் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து, பேருந்தை பின்புறமாகத் தள்ளி, சிக்கிய நபரை மீட்டனர். இதனையடுத்து, பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வராததால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து மீது வழக்கு இல்லையா? என இணையதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Next Story
சொகுசுப் பேருந்தின் முன் டயர் வெடித்து விபத்து; டோல்கேட் நாசம்
சேலம் அருகே தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் இரவு வேளையில் தாறுமாறாக ஓடிய பேருந்து டோல்கேட் பகுதியில் நிறுத்தபட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் சொகுசு பேருந்து ஒன்று இரவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து குமாரபாளையம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. பின்னர் தாறுமாறாக பேருந்து இடிபாடுகளில் சிக்கி நின்றது. இதில் பேருந்தின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.