இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் 7-வது அதிபராக பதவி ஏற்றார். அதனையடுத்து இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்பட்டார்.

gotabaya rajapakse in delhi

Advertisment

Advertisment

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வந்தார். இந்திய குடியரசு மாளிகையில் அவரை பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வரவேற்றனர். வருகை தந்த கோத்தபய ராஜபக்சேவிற்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையை கொடுக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து இருவரும் கலந்துரையாடினர். அதன்பின் பேசிய கோத்தபய ராஜபக்சே, "நாங்கள் (பிரதமர் மோடி மற்றும் ராஜபக்சே) மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்தோம். எங்கள் காவலில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.