Skip to main content

தங்க கடத்தல் வழக்கு!!! -தமிழகத்திலும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம்...

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
ிு

 

 

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.

 

பொதுவாக தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்த தகவலை அடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர், அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்க கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது. மேலும், இந்த தங்க கடத்தலில் முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு இதுகுறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பினராயி விஜயன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா என்ற பெண்ணை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கேரளாவில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னைக்கு வர உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளா தங்கக் கடத்தல் வழக்கு; ஸ்வப்னா சுரேஷ் உள்பட 44 பேருக்கு அபராதம்!

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Kerala gold theft case; 44 people including Swapna Suresh fined!

 

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி துபாயிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுமார் 15 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்டது. ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இது தொடர்பான வழக்கில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அப்போதைய ஐக்கிய அமீரக தூதரகத் துணைச் செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்த வழக்கு தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட 3 தரப்பும் விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் ஜாமீனில் இருக்கின்றனர். மேலும், இது தொடர்பான வழக்கு தற்போது எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், தங்கக் கடத்தல் குறித்து விசாரித்த மத்திய சுங்கத்துறை, இந்த கடத்தலில் நேரடியாக ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோருக்கு தலா ரூ. 6 கோடி வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருக்கு ரூ. 50 லட்சம் என இந்தக் கடத்தலில் ஈடுபட்ட 44 பேருக்கும் மொத்தம் 66.65 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என மத்திய சுங்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

 

Next Story

அன்றைய சபாநாயகரும் இரண்டு அமைச்சர்களும் - பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஸ்வப்னா சுரேஷ்

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Swapna Suresh accusing Former kerala assembly speaker and former minister

 

தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ், தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரளா நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்வப்னா சுரேஷ், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டை தெரிவித்தார். இதுமட்டுமின்றி கடந்த 12ம் தேதி தனது சுயசரிதையை எழுதி வெளியிட்ட ஸ்வப்னா சுரேஷ், அதில் ஐ.ஏ.எஸ். சிவசங்கரனுடன் தனியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இவர் குற்றச்சாட்டுக்கு ஆளான காலத்தில் அமைச்சர்களாக இருந்த இருவர் மீதும் கேரளா சபாநாயகர் மீதும் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  

 

சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து டிப்ளமாடிக் எனப்படும் தூதரக அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்சல் மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், முதன்மை செயலாளர் சிவசங்கரன் ஆகியோர் கைதாகினர்.

 

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்வப்னா சுரேஷ், தனது வாக்குமூலத்தில் கடந்த 2016- ஆம் ஆண்டு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் துபாய் சென்றபோது சிவசங்கரன் அளித்த பணக்கட்டுகள் அடங்கிய ஒரு பை தூதரகம் மூலம் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீனா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருந்தார். அவரது அந்த வாக்குமூலம் கேரள மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி எதிர்க் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தன்னை அப்போதைய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஓட்டல் அறைக்கு வரச் சொல்லி நிர்பந்தப் படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதேபோல் மூணாறுக்கு வர வற்புறுத்தியதாக அன்றைய அமைச்சர் தாமஸ் ஐஸக் மீதும், அரசு இல்லத்திற்கு அன்றைய சபாநாயகர் ராமகிருஷ்ணன் அழைத்ததாக அவர் மீதும் ஸ்வப்னா குற்றஞ்சாட்டியுள்ளார். இவர்கள் மூவரும் பாலியல் தொடர்பாக பலமுறை வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.