Skip to main content

தங்கத்துக்கான இறக்குமதி வரி 10% ஆக குறைப்பு!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

GOLD IMPORT TAX REDUCED THE UNION BUDGET

 

2021- 2022 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு ரூபாய் 1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து பேருந்து வசதிகளை மேம்படுத்த ரூபாய் 18,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 1.5 லட்சத்தில் இருந்து ரூபாய் 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்தவிலை வீடுகளைக் கட்டும் திட்டங்களுக்கு 2022 வரை வரிச்சலுகை. மறைமுக வரிகளில் வழங்கப்பட்டு வரும் 400 விதமான பழைய விலக்குகள் மறுபரிசீலனை செய்யப்படும்.

GOLD IMPORT TAX REDUCED THE UNION BUDGET

 

வருமான வரி ஏய்ப்பவர்களை விரைவாகவும், எளிதாகவும் கண்டறிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். பெரிய அளவில் வரி ஏய்ப்பு கண்டுபிடித்தால் மட்டுமே 10 வருட பழைய வருமான வரி கணக்கு ஆய்வு செய்யப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பழைய வருமான வரி கணக்குகள் மீண்டும் ஆய்வு செய்யப்படாது. தங்கத்துக்கான இறக்குமதி 12.5% லிருந்து மீண்டும் 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது" என்றார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று (01/02/2021) காலை 11.00 மணிக்கு பட்ஜெட் உரையைத் தொடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதியம் 12.50 மணிக்கு வாசித்து முடித்தார். பட்ஜெட் தாக்கல் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் அமைச்சர் வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பட்ஜெட் உரையில் தனிநபர் வருமான வரி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூபாய் 2.50 லட்சமாக தொடருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.