Skip to main content

ஆடு, கோழி வெட்ட தடை... திரிபுரா உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

திரிபுரா மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை வெட்டுவதற்கு தடை விதித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

அந்த மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாதா திரிபுரேஸ்வரி கோவிலில் உள்ள சக்தி மடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆடு பலியிடப்படுவது வழக்கம். இதற்கான நிதியை மாநில அரசு அளித்து வருகிறது. இதனை எதிர்த்து சுபாஷ் பட்டாச்சார்ஜி என்ற வழக்கறிஞர், திரிபுரா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். 

Goat and Poultry Barriers    Tripura High Court Action


இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி அரிந்தம் லோத் ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது கோயிலில் விலங்குகளை பலியிடும் நடைமுறை சுதந்திரத்துக்கு முன்பிருந்தே  தொடர்ந்து வருகிறது. அந்த நடைமுறையை தற்போது நிறுத்தக்கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் தரப்பில் இந்து உணர்வை புண்படுத்தும் வகையில் தினந்தோறும் ஆடு பலி கொடுப்பது அமைந்திருப்பதாக வாதிட்டார்.


இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற செயல்களுக்கு அரசு பணம் கொடுக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. இது போன்ற செயல்களை அரசு தடுக்க வேண்டுமே தவிர உயிர் பலி கொடுக்க அனுமதி அளிக்கக்கூடாது. இனி திரிபுரா மாநிலத்தில் எந்த இந்து கோவில்களிலும் ஆடு, கோழி விலங்குகளை பலியிட தடை விதிக்கிறோம்.

Goat and Poultry Barriers    Tripura High Court Action


ஆடு மற்றும் கோழி கோவில்களுக்கு தத்துக்கொடுக்கலாமே தவிர, பலியிட அனுமதியில்லை. இந்த உத்தரவை மாநில அரசு கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் கோயில்களில் சிசிடிவி கேமரா வைத்து இதை கண்காணிக்க வேண்டும் என்றும், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.