Skip to main content

காந்தி குடும்பத்திற்கு கோவா எப்பொழும் பொழுதுபோக்கு இடம்தான் - அமித்ஷா தாக்கு!

Published on 30/01/2022 | Edited on 30/01/2022

 

kjl


உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோவா மாநில தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பஞ்சாப் மற்றும் கோவா மாநிலத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

 

நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சி கோலோச்சி வந்த அம்மாநிலத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜக தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்காக மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களையும் பாஜக, தங்கள் கட்சிக்கு  இழுத்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.  " காந்தி குடும்பத்திற்கு கோவா எப்பொழும் ஒரு பொழுதுபோக்கு இடமாகவே இருந்து வருகிறது. ஆனால் கோவா, பாஜக ஆட்சியில் வளர்ச்சி அடைந்துள்ளது. நாங்கள் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் அப்படி ஒரு சாதனையை செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்