Skip to main content

ஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்... தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்...

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

புகழ்பெற்ற 'பர்கர் கிங்' கடையில் பர்கர் சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புனேவில் நடந்துள்ளது.

 

Glass pieces in burger injures man in Pune

 

 

புனே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் சஜீத் பதான் அங்குள்ள பர்கர் கிங் கடையில் நண்பர்களுடன் சென்று பர்கர் ஆர்டர் செய்துள்ளார். பர்கர் வந்ததும் அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரது வாய் வழியாக தொடர்ந்து ரத்தம் வந்தபடியே இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவர் சாப்பிட்ட பர்கரை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் உடைந்த கண்ணாடி துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சாப்பிட்ட பர்கரில் இருந்த கண்ணாடி துண்டுகள் அவரது தொண்டை மற்றும் உணவு குழலை கிழித்து சென்றுள்ளது.

மேலும் சில கண்ணாடி துண்டுகள் அவரது தொண்டைக்குள் சிக்கியிருந்த நிலையில் அவர் வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹிந்து மாணவிகளுடன் பேசிய இஸ்லாமிய மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to the Muslim student who spoke with the Hindu girls

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் சாவித்ரிபாய் புலே என்ற பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும், 19 வயது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஹிந்து மாணவிகளுடன் பேசியதாகவும், மதத்தின் பேரில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், போலீசார் விசாரணையில், ‘பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவர் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பிரிவில் படித்து வருகிறார். அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் சுமார் ஒன்பது மாதங்களாக தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 2 மணியளவில், தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, 6 மாணவர்கள் அந்த கேண்டீனுக்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவரிடம் ஆதார் அட்டை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது, அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், மதம் தொடர்பாக தவறாகப் பேசி அவரைத் தாக்கியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஹோட்டல் அறையில் அரங்கேறிய கொடூரம்; காதலியை சுட்டுக் கொன்ற காதலன்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Boyfriend incident girlfriend in Pune

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் வந்தனா திவேதி. 26 வயதான இவர், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த 27 ஆம் தேதி இரவு வந்தனா தன்னுடைய காதலனுடன் சேர்ந்து ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறை எண் 306ல் தங்கியுள்ளார். ஆனால், அடுத்த நாள் காலை அந்த அறையில் தனியாக இருந்த வந்தனா சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகம் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், உடனடியாக ஹோட்டலுக்கு வந்த போலீசார், அறையில் இருந்த வந்தனாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புனே போலீசார், இளம்பெண் வந்தனா திவேதி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வந்தனாவுடன் வந்த இளைஞர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் பதற்றத்துடன் ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. மேலும், அந்த இளைஞரின் பெயர் ரிஷப் நிகாம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மும்பை பகுதியில் தலைமறைவாக இருந்த ரிஷப் நிகாமை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது. அதில், போலீசால் கைது செய்யப்பட்ட ரிஷப் நிகாமும் ஹோட்டல் அறையில் கொலை செய்யப்பட்ட வந்தனாவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இவர்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இதனிடையே, லக்னோவில் இருந்த வந்தனாவுக்கு புனேவில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை கிடைத்ததால் அவர் அங்கிருந்து புனேவிற்கு வந்துவிட்டார். ஆனால், அதில் ரிஷப் நிகாமிற்கு பிடிக்கவில்லை. தன் காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாள் என்று ரிஷப் நிகாம்மிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது வாழ்க்கையில் காலப்போக்கில் சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரிஷப்பிற்கும் வந்தனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில், வந்தனா தன்னை விட்டுட்டு வேறு நபரை காதலிக்கலாம் என ரிஷப் நினைத்துக்கொண்டிருந்தார். ரிஷப்பிற்கு வந்தனா மீது ஏற்பட்டிருந்த சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதன் நீட்சியாக, ரிஷப்பை குறிப்பிட்ட சில நபர்கள் சமீபத்தில் 2 முறை தாக்கியுள்ளனர். மேலும், வந்தனா தான் இந்த தாக்குதலுக்கு மூலகாரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ரிஷப்பிற்கு தன் காதலி வந்தனா மீது இருந்த கோபம், ஒருகட்டத்தில் கொலை வெறியாக மாறியுள்ளது.

இத்தகைய சூழலில், சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, ரிஷப்பிற்கும் வந்தனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த  ரிஷப், தன் காதலி வந்தனாவை கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்தனாவை கொலை செய்யும் முடிவிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில், ஹிஞ்சேவாடி பகுதியில் மராத்தா சமூக இட ஒதுக்கீடு வெற்றி கொண்டாட்டம் நடந்துள்ளது. மேலும், அந்த பகுதி முழுக்க அதிகளவில்  பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தது.

அப்போது, சுதாரித்துக்கொண்ட ரிஷப், அவர்கள் பட்டாசு வெடிக்கும் நேரம் பார்த்து வந்தனாவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதில், அந்த பெண்ணின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் 4 குண்டுகள் பாய்ந்து வந்தனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். அதே வேளையில், பட்டாசு சத்தம் காரணமாகத் துப்பாக்கியால் சுட்ட சத்தம் வெளியே கேட்காமல் இருந்தது" விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, கொலையாளி ரிஷப்பிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, பெண் ஐடி ஊழியர் ஒருவர் தனது காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.